வேலூர் ஸ்மார்ட் சிட்டி கீழ் நடந்துவரும், வேலூர் கோட்டை அகழி தூய்மை படுத்தும் பணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் பணியை பார்வையிட்டப்போது.உடன் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்: மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய - மாநில அரசுகளை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
நாடாளுமன்ற வளாகம் முன்பு திமுக போராட்டம்: இன்று நாடாளுமன்றத்தில் 70ம் ஆண்டு அரசியலமைப்பு தினவிழா கொண்டாடத்தின்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் கழக மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களுடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் இணைந்துநாடாளுமன்றத்தில் *டாக்டர்.B.R.அம்பேத்கார் சிலை முன்பு போராட்டம் நடத்தியப்போது.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதவியேற்கவுள்ளார், இந்நிலையில் கழக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார், கழகத்தலைவர் அவர்களும் உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்றார், உடன் கழக பொருளாளர் திரு. துரைமுருகன் அவர்கள் இருந்தார்.